Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:வடபழநி 100 அடி சாலையில் 'யா மொஹிதீன்' பிரியாணி கடை அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தி பிரியாணி செய்வதாக புகார் வந்தது. உணவு பாதுகாப்பு துணை நியமன அலுவலர் சதீஷ் குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று மாலை அக்கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கெட்டுப்போன 65 கிலோ சிக்கன், மட்டன், மீன் மற்றும் 30 கிலோ பிரியாணி பறிமுதல் செய்யப் பட்டது. மேலும், பிரியாணி கடை தற்காலிகமாக மூடப்பட்டது.